Tuesday, February 14, 2006

திராட்சை


திராட்சையில் பல வகைகள் உண்டு. சில பச்சை நிறமாகவும், சில கருப்பு நிறமாகவும் உள்ளன.

திராட்சையை உலர்த்திப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்

திராட்சை எத்தனை வகையாக இருப்பினும் அதை பச்சையாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிட்டாலும் அதற்கு நல்ல மருத்துவ இயல்பு அமைந்திருக்கிறது.

பல வகையான குடல் கோளாறுகளுக்கு பச்சைத் திராட்சை நல்ல வகையில் பயன்படுகிறது.

நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு.

பச்சைத் திராட்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப் புண், வாய்ப்புண் ஆறும்.

கருப்புத் திராட்சையில் பச்சைத் திராட்சையை விடச் சில வகை சத்துக்கள் அதிகமாக உள்ளன.

உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.

வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

முதுமைப் பிராயத்தினர் உலர்ந்த திராட்சையைப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப்படும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம்பழத்தில் இரண்டு வகை உண்டு. பேரிச்சம் பழம், சிற்றீச்சம் பழம் என அவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

பேரிச்சம் பழம் நமது மாநிலத்தில் அதிக அளவு கிடைப்பதில்லை. வட இந்தியாவில் பாலைவனப் பிரதேசங்களில் இது ஓரளவு கிடைக்கிறது.

சிற்றீச்சம்பழம் நமது தமிழகத்தில் மிகவும் தாரளமாக கிடைக்கிறது.

உடல் வளர்ச்சியில் இந்தப் பழம் சிறந்தது. குழந்தை களின் உடல் வளர்ச்சிக்கு இது ஏற்றது.

நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்து உடல் நலம் பெறாதவர்களின் உடல் தேறுவதற்கு பேரிச்சம் பழம் பேருதவி செய்யும்.

போரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. இரத்தத்தின் செழுமையைக் கூட்டி அதிகரிக்க இது உதவும்.

எலுமிச்சம் பழம்


நோய் ஏற்பட்டால் தடுப்பதற்கு மட்டுமின்றி ஒரு மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. சித்த மருத்துவத்தில் தனியொரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் வருமாறு..

இரத்தம் தூய்மைக்கேடு அடைந்து விட்டால் அதை எலுமிச்சம் பழம் குணப்படுத்துகிறது.

மண்ணீரல் வீக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எலுமிச்சைச் சாறு கொண்டு எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

அன்றாடம் எலுமிச்சை சாற்றை ஒரு குறைந்த பட்ச அளவு எப்படியாவது உபயோகித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே எழுவதில்லை.

பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.

எலுமிச்சம் பழத்தின் சாற்றில் குறிப்பாக பொட்டா சியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்கள் கணிசமான அளவில் உள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்துமே நமது உடல் நலத்தை கட்டிக் காக்க உதவுபவையாக உள்ளன.

குறிப்பாக ஸ்கர்வி, வயிற்று வலி, அஜிரணம், மலச் சிக்கல் போன்ற கோளாறுகளை மிகக் குறைந்த காலத்தில் நிவர்த்தி செய்யும்

மனிதர்களுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் தாரளமான உள்ளது. இந்த சி-யை ஆஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வர். இது நீhpல் கரையும் தன்மை பெற்றது. ஆஸ்கார்பிக் அமிலம் உயிhpயல் ஆக்ஸி கரணங்களில் ஈடுபடுகிறது. இந்தச் சத்து நோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்ட மளிக்கக் கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்கு புத்துணர்வையும், தெம்பையும் அளிக்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சி அடையாமல் காக்கிறது.

Thursday, February 09, 2006

பப்பாளிப்பழம்


பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது.

பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன. பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தக்காளி பழம்


நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது.

அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது. இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன. இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

தயிர் என்ற அருமருந்து

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது. இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும். தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம். சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம். கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும்.

தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது. தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.

ஆப்பிள் சாப்பிடுங்க


ஆப்பிள் எனும் அருமருந்து
ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

பயன்கள் கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

குறைகள் ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது.

ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம். ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம்.

ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது.

Friday, January 06, 2006

தர்ப்பூசணி பழம்

கோடைக்காலத்தில் அதிகமாக விற்கப்படும் தர்ப்பூசணி கோடைக் கனி என்றும் கூறப்படும். தாகத்தையும் நாவறட்சியையும் தவிர்க்கும் தன்மை கொண்ட தர்ப்பூசணிப்பழம் நீர்ச்சத்து மிகுந்தது இவைகள் சிவந்த நிறத்தில் மட்டுமல்லாமல் வெண்மையாகவும் கூட காணப்படும். நிறம் எதுவாயினும் இதை உண்ணலாம். சில இனிப்பாகயிருக்கும். சில ருசியே இல்லாமல் சப் பென்றும் இருக்கும்.

இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது. இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும். அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.

விலை மலிவாக இச்சமயம் கிடைக்கும் இப்பழத்தை வாங்கி உண்டு இதன் பயன்களைப் பெறுவோம்.

பீட்ரூட்

  • புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
  • மலச்சிக்கலைப் போக்கும்.
  • பித்தத்தைக் குறைக்கும்
  • அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும். அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜ“ரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது. ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்­ர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன. கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும். பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்­ருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும்.

பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்­ரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து žயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும். புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழம் சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் என்கிறார் நபிகள் நாயகம். இதை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? காலை உணவாக பேரீச்சம ்பழங்கள் சிலவற்றை சாப்பிட வேண்டும். அவரை சூன்யமோ, விஷக்கடியோ நெருங்காது.

இதை "அஜ்வா' என அழைப்பர். "அஜ்வா' என்றால் "விஷத்தை முறிக்கக் கூடியது' எனப் பொருள். புதிய பழங்களுடன் காய்ந்த பழங்களையும் சேர்த்து உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் ஷைத்தான் நம்மை நெருங்க மாட்டான். இதை சாப்பிடுவோருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். நம்மைப் பெற்ற தந்தை எப்படி பாதுகாக்கிறாரோ, அதே கவனத்துடன் பேரீச்சம்பழமும் பாதுகாக்கிறது.

அதனால் தான் இப்பழத்தை "உங்களின் சிறிய தந்தை' என வர்ணித்தார் நபிகள் நாயகம். அவர் மேலும் கூறும் போது, ""நம் தந்தை ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எந்த மண்ணிலிருந்து படைத்தானோ, அதில் மிஞ்சிய மண்ணால் பேரீச்சம்பழத்தை படைத்தான்,'' என்றார். ஆதம் (அலை) அவர்களே உலகின் முதல் மனிதர். அவரிடமிருந்தே பிற உயிர்கள் தோன்றியதால், அவரை முதல் மனிதர் என இஸ்லாம் சொல்கிறது.

பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து நிறைய உள்ளது. எல்லோருமே சாப்பிட முயற்சி செய்யுங்களேன்.

குறிப்பாக ரத்த சோகை உள்ளவர்களும் ரத்தம் உடலில் கம்மியாக இருப்பவர்களும் பேரீச்சையைத் தொடர்ந்து உண்டு வந்தால் பலன் நிச்சயம்.

வெங்காயம்

தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள். ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது.

விஷத்தையும் முறித்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர் களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற் சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும். யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும்.

மன நிலையில் சமநிலை உண்டாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும். புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன. வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங் கை, கன்னங்கள், வயிறு, குதி கால் போன்ற இடங்களில் தடவிக்கொள்ளலாம்.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறhர்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.

பாகற்காய்

பாகற்காயை சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு நோயின் தொந்தரவு குறையும். இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் ஹைபா-க்ளைசேமிக் என்ற அமிலம் இதில் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் பாகற்காயில் வைட்டமி பி, நீர்ச்சத்து, கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம் ஆகியவை உள்ளன. எலும்புகள், நரம்புகள், கல்லீரலை பலப்படுத்தும் சக்தி இதற்கு உண்டு. தீப்புண்களை பாகற்காயின் இலைச்சாறு விரைவில் குணப் படுத்தும். பாகற்காய் நச்சுகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே ஒவ்வொரு மனிதனும் தவறாமல் உணவில் இதனை சேர்த்துக் கொண்டால் நூறு வயதைத் தொடலாம்!

உடல் பருமன் அதிகரிப்பதைக் குறைக்க...

உடலில் வாதத்தை நீக்கும், கொழுப்பு சேருவதைத் தடுக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும்.

பார்லி நன்கு உகந்த உணவு வகையாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிறுநீர் அதிகமாக உற்பத்தியாவது தடுக்கப்பட்டு அதிக அளவு நீர் வெளியேறுவது தடுக்கப்படுகிறது.

கொள்ளு, உலர்ந்த பச்சிடி, பச்சைநிற காய்கறிகள் மற்றும் அனைத்து பழங்களிலும் அதிகளவு நார்ச்சத்து அடங்கியிருக்கிறது. இவற்றை எடுத்துக் கொள்வதால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம். கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும்.

எருமைப் பாலைவிட, மாட்டுப் பால் குறைவான கொழுப்பு சக்தியினைப் பெற்றிருக்கிறது.

பீஸா உணவு வகைகள், பர்கர்ஸ், கூழ்மப்பொருள், கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றைக் குடிக்கக் கூடாது.
மாவுப் பொருள்கள் அதிகம் கலந்த பொருள்கள் மற்றும் கொழுப்பு நீக்கப்படாத நெய் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

இனிப்பு பொருள்கள், வறுக்கப்பட்ட உணவுகள், ஸ்டார்ச் அதிகம் நிறைந்த உருளைக்கிழங்கு, அரிசி சாப்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.
காலையில் குறைந்தளவில் சர்க்கரை கலந்த தேனீர், காபி, ஒரு தம்ளர் பசும்பால் ஆகியவற்றுடன் காலை சிற்றுண்டியாக புதிதாக தயாரிக்கப்பட்ட பச்சிடியுடன் சேர்த்து ஒரு குறிப்பிட்டளவு பருப்புடன் அன்றைய உணவுனை உட்கொள்ள வேண்டும்.

கோதுமை மாவால் தயாரிக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்களை, ஜோவார் கொண்டு தயாரிக்கப்பட்ட ரொட்டி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பச்சடி ஆகிய உணவு வகைகளை உள்ளடக்கியதாக தினசரி உணவு இருக்க வேண்டும்.
காலை அல்லது மாலை நடுநிசி பொழுதில் பசி ஏற்பட்டால் பருப்பு, காய்கறி சூப்புகள், எலுமிச்சை, தேங்காய் நீர் அல்லது அடர்வுமிகு பாலாடை நீக்கிய நீர் ஆகியவற்றைக் குடிக்கலாம். இது அதிகப்படியான தாகத்தைக் கட்டுப்படுத்தும்.
இயற்கையில் 'புரோட்டோ ஸ்' கிடைக்கும் வகையில் அவ்வப்போது பருவகாலங்களில் வரும் தூய்மையான பழங்களை உட்கொள்ளலாம்.

உடற் பயிற்சிகள்:-
30 லிருந்து 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம் இது உடலில் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
வேகமாக நடத்தல், நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் அதிக ஆக்சிஜனை உள்ளுழுத்துவிட உதவும் உடற்பயிற்சி, யோகா, டென்னிஸ் விளையாடுதல் ஆகியவையும் உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.
தாகம், இளைப்பு, மூச்சுவிடுவதில் கோளாறுகள், சக்தியை முழுவதுமாகச் செலவழித்தல் இருமல் ஆகியவற்றை அதிகம் வராமல் தடுக்க வேண்டும்.

தயிர் என்ற அருமருந்து

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது.
இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
தயிரில் இருக்கும் பாக்டீரியா, தோலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும்.

தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்து, உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம், அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும், எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம்.

சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம்.
கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது.

தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.

கண் பார்வை கூர்மைக்கு...

குறிப்பாக ஐந்து முதல் பதினைந்து வயது வரையுள்ள வளரும் குழந்தைகள் தினமும் பத்து அல்லது பதினைந்து சூரியகாந்தி விதைகளை உரித்து தின்பதால் கண் பார்வை கூர்மையாகும்.

தினமும் இரண்டு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகநக் குணப்படுத்துவதுடன், இதயத்திற்கும் வலுவூட்டுகிறது.
காய்ச்சற்கட்டி (Spleen) என்னும் நோய் மிகவும் கொடுமையானது. இதற்கு பப்பாளிப்பழத்தையும், சப்பாத்திக் கள்ளியின் பழத்தையும் வேளை மாற்றித் தந்து வந்தால் விரைவில் குணம் காணலாம்.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள Cholesterol குறையும்.
நெல்லிக்கனியின் சாற்றோடு பசுவின் நெய் ஒரு கரண்டியும் சேர்த்து காலை வேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையும், மூளை தெளிவும், நரம்புகளுக்கு வன்மையும் உண்டாகும்.

காய்கறிகள்: பயன்களும், பக்கவிளைவுகளும்



கத்தரிக்காய்
இதில் பல வண்ணங்கள் உண்டு என்றாலும் அனைத்திலும் உள்ள சத்து ஒன்றேதான். பிஞ்சு கத்தரிக்காய் சமைப்பதற்கு நல்லது. முற்றின கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சொறி சிரங்கைக் கொண்டு வரும். இதில் தசைக்கும், இரத்தத்திற்கும் உரம் தருகிற வைட்டமின்கள் சிறிதளவு உள்ளன. இதனால் வாய்வு, பித்தம், கபம் போகும். அதனால் தான் பத்தியத்துக்கும் இக்காயைப் பயன்படுத்தச் சொல்கிறார்கள். அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதை உண்டு நல்ல பயன் பெறலாம்.

அவரைக்காய்
இதிலும் பல வகைகள் உண்டு. வெள்ளை அவரைப் பிஞ்சை நோயாளிகள் உண்ணும் காலத்தில் பத்திய உணவாக உண்ணலாம். இதை சமைத்து உண்டால் உடலை உரமாக்கும் காம உணர்ச்சியைப் பெருக்கும். சூட்டுடம்புக்கு இது மிகவும் நல்லது. இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்றது.

வெண்டைக்காய்
இதன் சுபாவம் குளிர்ச்சி. இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும் இதில் வைட்டமின் சி, பி உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை உண்டுவந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத் தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வெண்டைக்காய் உணவு விந்துவை கட்டிப் போகத்தின் உற்சாகத்தை உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சுகள் இரண்டொன்றை பச்சையாகவே தினந்தோறும் வெறும் வயிற்றில் உண்டு வந்தால், மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம் சரிப்பட்டு விடும். உடம்பில் வாயுமிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால் வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

புடலங்காய்
இது சற்று நீரோட்டமுள்ள காய். சூட்டுடம்புக்கு ஏற்றது. உடம்பின் அழலையைப் போக்கும். தேகம் தழைக்கும். இது எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும். வாத, பித்த கபங்களால் ஏற்படும் திரிதோஷத்தைப் போக்கும். வயிற்றுப் பொருமல், வயிற்றுப் பூச்சி இவற்றை போக்கும். இதை உண்டால் காமத்தன்மை பெருகும்.

வாழைத்தண்டு
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது. இதன் சுபாவம் சூடு என்றாலும் சிறு நீரைப் பெருக்கும். வாழைத்தண்டுப் பச்சடி உடம்பின் உஷ்ணத்தைப் போக்கும். வாத பித்தம், உஷ்ணம் முதலியவற்றைத் தணிக்கும். கபத்தை நீக்கும். இதை உண்டால், குடலில் சிக்கிய பயிர், தோல், நஞ்சு இவற்றை நீக்கும். வாரத்திற்கு ஒரு முறையேனும் இதை உண்ணுவது நலம்.

தேங்காய்
இது சமையலுக்கு மிகவும் பயன்படுகிறது. இதில் ஏ, பி வைட்டமின்கள் சிறிதளவு உண்டு. இது குடல் புண்ணையும் ஆற்றும். இதனால் தாது விளையும். தேங்காய் வழுக்கையில் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் மூலச் சூட்டை மாற்றும்.

சுரைக்காய்
இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.