Saturday, July 09, 2011

கண்களுக்கு புத்துணர்ச்சியூட்ட

கண்கள் அழகாக மட்டுமல்ல, தெளிவான பார்வையோடும் இருப்பதற்கு, சில பயிற்சிகள் அவசியம். 'கண் களுக்கு கூடவா எக்ஸர்சைஸ்?’ என்று ஆச்சர்யப்படாமல் இந்தப் பயிற்சிகளை செய்து பாருங்கள். நாள் முழுவ தும் துறுதுறுவென்று சுறுசுறுப்பான உயிரோட்டம் கொண்ட கண்களுக்கு நான் கியாரன்டி!

கண்களை மூடிக்கொண்டு, தோள்களை அசைக்காமல் தலையை மட்டும் இடது வலமாக இருபது முறை சுழற்றுங்கள். இதேபோல வலது இடமாகவும் இருபது முறை செய்யுங்கள்.

கண்களை மூடியபடி சந்தோஷமான நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கியிருங்கள். பிறகு, மெல்ல கண்களைத் திறந்து தூரத்தில் இருக்கும் மரம், செடி, கட்டடம் போன்றவற்றைப் பாருங்கள். பிறகு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பாருங்கள். இப்படி மாறி மாறி தூரமாக இருக்கும் பொருளையும் அருகில் இருக்கும் பொருளையும் பாருங்கள்.

தலையை நேராக வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக கொஞ்ச நேரம் நில்லுங்கள். பிறகு, தலையை கொஞ்சமும் அசைக்காமல் விழிகளை மட்டுமே உருட்டி தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தைப் பாருங்கள். பிறகு தலையை அசைக்காமல் உங்கள் பார்வையை கால்களுக்கு அடியில் இருக்கும் பூமியை நோக்கி திருப்புங்கள். அதேபோல தலையை அசைக்காமல் வலதுபுறத்தில் தூரமாக இருக்கும் ஏதோ ஒரு மரம் அல்லது கட்டடத்தைப் பாருங்கள். அதன் பின் இடது பக்கமாக இருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது செடியைப் பாருங்கள். இந்த பயிற்சியை எத்தனை முறை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யுங்கள்.

கருவளையத்திலிருந்து விடுதலை பெற..!

கருவளையம், பரம்பரை சார்ந்தது. வெயிலில் அலைவது, தூக்கமின்மை, மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் பெண்களின் முகம் வெளுத்துப் போய் காட்சியளிக்கும். இந்த சமயங்களில் கருவளையம் 'ஹைலைட்’டாகி பளீரென்று தெரியும். இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், பாதி டீஸ்பூன் தேனை கலந்து கருவளையத்தின் மீது தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிக்கொண்டு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கருவளையத்தின் மீது தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

உருளைக்கிழங்கை நன்கு கழுவிவிட்டு, கற்கண்டு அளவுக்கு அதை பொடிப்பொடியாக நறுக்கி, பேண்டேஜ் துணியில் வைத்து கருவளையத்தின் மீது வைத்து, சுமார் அரை மணி நேரம் படுத்து எழுந்து முகத்தைக் கழுவினாலும் கருவளையம் மறைந்துவிடும்.

ரத்த அழுத்தம்

மன உழைப்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் உழைப்புக்கு கொடுக்காதததுதான் ரத்த அழுத்தத்துக்கு காரணம்.

உயர் ரத்த அழுத்தம் (Hyper Tension), குறைந்த ரத்த அழுத்தம் (Hypo Tension) என்று இரண்டு வகை உண்டு. வயது வந்த ஆண், பெண் இருவருக்கும் இயல்பான ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவுதான் இருக்க வேண்டும். இதில் சுமார் 20-30 மி.மீ. பாதரச அளவு குறையும் போது, குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை தலைதூக்கும். இந்த அளவு குறையும்போது, அதிக ரத்த அழுத்த பிரச்னை தாக்கும். ரத்த அழுத்தத்துக்கான எல்லைக்கோடு 130/85 என்று சொல்லலாம். இந்த அளவில் வந்துவிட்டால் நாம் உஷாராகி, உடனடியாக உணவு, வாழ்க்கை முறைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது.

140/90-க்குமேல் வந்த பிறகுதான் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அலட்சியமாக இருந்துவிட்டால் அதுவே ஆபத்தில் முடியலாம். பொதுவாக, உடல்நலம் தொடர்ந்து பாதிக்க ஆரம்பித்தாலே ரத்த அழுத்தத்தை பரிசோதித்து கொள்ளவேண்டியது முக்கியம்.

பொதுவாக 40 வயதைக் கடந்தவர்கள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்ததைப் பரிசோதிப்பது அவசியம்!'' - ரத்த அழுத்தத்தின் அளவுகளை அடுக்கிய ருசித்ரா, உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்களுக்கான உணவு, பயிற்சி முறைகள் பற்றியும் சொல்லத் தொடங்கினார்.

''உடல் பருமன், தொப்பை உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. பருமனைக் குறைக்கவில்லை என்றால், இருதய நோய் தாக்குதலுக்கும் ஆளாக நேரிடலாம். வேகமாக ஓடுவது, கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் ரத்த அழுத்தம் மேலும் அதிகரிக்கும். மிதமான உடற்பயிற்சி அல்லது நடை பயிற்சி நல்ல பலனைத் தரும்.

கோதுமை, ராகி, கம்பு போன்ற நார்ச்சத்துள்ள முழு தானியங்களை அதிகமாகவும், பாதாம், பிஸ்தா போன்றவற்றை குறைவாகவும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உணவில் குறைவான உப்பு மற்றும் குறைவான சோடியத்தைப் பயன்படுத்த வேண்டும். அதிக உப்பு சேர்த்த உணவுகள் மற்றும் பண்டங்களைக் கூடியவரை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சட்னி, ஊறுகாய், பாட்டிலில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்கள், அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்'' - என்றவர் குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழி முறைகளையும் விவரித்தார்.

''ஒருவருக்கு உடல் சோர்வு, சுறுசுறுப்பின்மை, மந்த நிலை தொடர்ந்து இருந்தாலே, குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு இருக்கக்கூடும். இதற்கு உடனடி பலனை தருவது உடற்பயிற்சிதான். உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த அழுத்தம் அதிகரித்து, உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும். தினசரி 45 முதல் 60 நிமிடங்கள் நடை, சைக்கிள் ஓட்டுதல் போன்றபயிற்சிகளை மேற்கொள்ளலாம். எடை தூக்கும் பயிற்சி செய்வதும் நல்லதுதான் என்றாலும், தோளுக்கு மேல் அதிக எடையை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது. உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தவிர்க்கச் சொன்ன உணவுகளை இவர்கள் சாப்பிடலாம். அதிக உப்பு சேர்த்த உணவை எடுத்துக் கொள்ளலாம். பேரிச்சம் பழம், அத்திப்பழம் போன்ற உலர் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். தினசரி குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் ரத்த அழுத்தம் சீராகும்.