Tuesday, February 14, 2006

திராட்சை


திராட்சையில் பல வகைகள் உண்டு. சில பச்சை நிறமாகவும், சில கருப்பு நிறமாகவும் உள்ளன.

திராட்சையை உலர்த்திப் பக்குவப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்

திராட்சை எத்தனை வகையாக இருப்பினும் அதை பச்சையாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிட்டாலும் அதற்கு நல்ல மருத்துவ இயல்பு அமைந்திருக்கிறது.

பல வகையான குடல் கோளாறுகளுக்கு பச்சைத் திராட்சை நல்ல வகையில் பயன்படுகிறது.

நரம்பு தளர்ச்சி காரணமாக ஏற்படுகிற உடல் நடுக்கத்தை சீர் செய்யும் வல்லமையும் இதற்கு உண்டு.

பச்சைத் திராட்சையின் சாறு எடுத்து பகல் உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வர நாக்குப் புண், வாய்ப்புண் ஆறும்.

கருப்புத் திராட்சையில் பச்சைத் திராட்சையை விடச் சில வகை சத்துக்கள் அதிகமாக உள்ளன.

உலர்ந்த திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட சுட வைத்த பசுவின் பாலில் இட்டு சிறிது நேரம் ஊறச் செய்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் இயல்பான சத்து சற்றுக் கூடுதலாகும்.

வளரும் குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுத்து வந்தால் அவற்றின் தசை வளர்ச்சி நல்ல முறையில் இருக்கும். மற்றும் அவற்றின் எலும்புகளின் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.

முதுமைப் பிராயத்தினர் உலர்ந்த திராட்சையைப் பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் அவர்கள் ஆரோக்கியம் காக்கப்படும்.

பேரிச்சம் பழம்

பேரிச்சம்பழத்தில் இரண்டு வகை உண்டு. பேரிச்சம் பழம், சிற்றீச்சம் பழம் என அவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.

பேரிச்சம் பழம் நமது மாநிலத்தில் அதிக அளவு கிடைப்பதில்லை. வட இந்தியாவில் பாலைவனப் பிரதேசங்களில் இது ஓரளவு கிடைக்கிறது.

சிற்றீச்சம்பழம் நமது தமிழகத்தில் மிகவும் தாரளமாக கிடைக்கிறது.

உடல் வளர்ச்சியில் இந்தப் பழம் சிறந்தது. குழந்தை களின் உடல் வளர்ச்சிக்கு இது ஏற்றது.

நீண்ட காலம் நோய் வாய்ப்பட்டிருந்து உடல் நலம் பெறாதவர்களின் உடல் தேறுவதற்கு பேரிச்சம் பழம் பேருதவி செய்யும்.

போரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக இருக்கிறது. இரத்தத்தின் செழுமையைக் கூட்டி அதிகரிக்க இது உதவும்.

எலுமிச்சம் பழம்


நோய் ஏற்பட்டால் தடுப்பதற்கு மட்டுமின்றி ஒரு மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. சித்த மருத்துவத்தில் தனியொரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் வருமாறு..

இரத்தம் தூய்மைக்கேடு அடைந்து விட்டால் அதை எலுமிச்சம் பழம் குணப்படுத்துகிறது.

மண்ணீரல் வீக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எலுமிச்சைச் சாறு கொண்டு எளிதில் குணப்படுத்தி விட முடியும்.

அன்றாடம் எலுமிச்சை சாற்றை ஒரு குறைந்த பட்ச அளவு எப்படியாவது உபயோகித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே எழுவதில்லை.

பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.

எலுமிச்சம் பழத்தின் சாற்றில் குறிப்பாக பொட்டா சியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்கள் கணிசமான அளவில் உள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்துமே நமது உடல் நலத்தை கட்டிக் காக்க உதவுபவையாக உள்ளன.

குறிப்பாக ஸ்கர்வி, வயிற்று வலி, அஜிரணம், மலச் சிக்கல் போன்ற கோளாறுகளை மிகக் குறைந்த காலத்தில் நிவர்த்தி செய்யும்

மனிதர்களுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் தாரளமான உள்ளது. இந்த சி-யை ஆஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வர். இது நீhpல் கரையும் தன்மை பெற்றது. ஆஸ்கார்பிக் அமிலம் உயிhpயல் ஆக்ஸி கரணங்களில் ஈடுபடுகிறது. இந்தச் சத்து நோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்ட மளிக்கக் கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்கு புத்துணர்வையும், தெம்பையும் அளிக்கிறது.

இதிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சி அடையாமல் காக்கிறது.

Thursday, February 09, 2006

பப்பாளிப்பழம்


பழ வகைகள் எத்தனையோ இருந்தாலும் அவற்றுள் எல்லாம் சிறந்தது பப்பாளிப்பழம் தான் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். இது உடல் ஆரோக்கியத்தை மீட்டு புத்துயிர் அளிப்பதால் இத்தகைய சிறப்புப் பெற்றுள்ளது.

பொதுவாக மாம்பழத்தில் அதிக வைட்டமின்கள் உண்டு. இதற்கு அடுத்தபடியாக பப்பாளிப்பழத்தில் தான் அதிக வைட்டமின்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ- தான் அதிக அளவில் இருக்கிறது. எனவே தான் இதை நைட்ப்ளைண்ட்னஸ் எனப்படும் மாலைக்கண் நோய்க்கு அருமருந்தாகப் பயன்படுத்தலாம் என அவர்கள் கூறுகின்றனர்.

ஒரு அவுன்ஸ் பப்பாளி சுமார் 513 மில்லி கிராம் வைட்டமின் ஏ-வைக் கொண்டுள்ளது. அதே போல பி1, 11 மில்லி கிராமும், பி2, 2.72 மில்லி கிராமும், சி, 13 மில்லி கிராமும், இரும்புச்சத்து 0.1 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 0.3 மில்லிகிராமும் அடங்கி உள்ளன.

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வசதி படைத்தவர்களால் மட்டுமே பெரும்பாலும் உண்ணப்படும் ஆப்பிள் பழத்தை விட இதில் உயிர்ச்சத்துக்கள் அதிக அளவில் அடங்கி உள்ளன. பப்பாளி ரத்த உற்பத்திக்கும், தசை வளர்ச்சிக்கும் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதால் பெரும்பாலான நோய்கள் வரும் முன்னரே தடுக்கப்படுகின்றன.

மலச்சிக்கலைத் தடுக்கவும், பெண்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், பல் தொடர்பான நோய்களைப் போக்கவும் இது பயன்படுகிறது. நரம்பு மண்டலத்துக்கு உரமேற்றும் தன்மை இதற்கு உண்டு என்பதால், இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தக்காளி பழம்


நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம். தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது.

அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது. இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன. இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும். குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு. தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள். எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.

தயிர் என்ற அருமருந்து

தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது. இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும். தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும். சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம். சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம். கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும்.

தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது. இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது. தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.

ஆப்பிள் சாப்பிடுங்க


ஆப்பிள் எனும் அருமருந்து
ஆப்பிள்களை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது. நோய்க்காலங்களில் ஆப்பிள்கள் சாப்பிடுபவர்களையும், மருத்துவர்கள் ஆப்பிள் கொடுங்கள் என்று கூறுவதையெல்லாம் நாம் பார்த்திருக்கறோம். ஆனால் குறிப்பாக அதன் மருத்துவப் பயன்கள் என்ன என்பதோ, அதன் ஒரு சில குறைவான தீமைகள் பற்றியோ அறிந்ததில்லை என்றே தோன்றுகிறது.

பயன்கள் கலோரிகளில் குறைவானது ஆப்பிள். மேலும் கரைபடக்கூடிய நார்ச்சத்துக்கள் ஆப்பிள்களில் அதிகம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் கொலஸ்ட்ராலைக் குறைக்க ஆப்பிள் பெரிதும் உதவுகிறது. ஃபைட்டோ கெமிக்கல்ஸ் ஆப்பிள்களில் அதிகம் காணப்படுகிறது. அதாவது குறிப்பாக `குவர்செடின்' அதிகமாக இருப்பதால், இருதய நோயையும், புற்றுநோயையும் தடுக்கிறது.

குறைகள் ஊட்டச்சத்துகள், பிற பழவகைகளை ஒப்பிடும் போது ஆப்பிளில் குறைவு ஆப்பிளின் தோலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்ச சொச்சங்கள் இருப்பது.

ஒரு புதிய ஆப்பிள் அருமையான ஆரோக்கிய உணவு. 140 கிராம் எடை கொண்ட ஒரு ஆப்பிளில் 90 கலோரிகளே உள்ளன. ஆப்பிளை அப்படியே எடுத்துக் கொள்வதும் உண்டு. சமைத்து உண்பதும் உண்டு. நறுக்கி வேகவைத்தும் உண்ணலாம். வறுத்து மொறுமொறுவென்றும் உண்ணலாம். ஆப்பிள் கொண்டு செய்யப்படும் பணியாரம், ஆப்பிள் சாலட்கள், ஆப்பிள் சாறு போன்றவற்றையும் உண்ணலாம்.

ஆப்பிள் சாற்றை சூடேற்றி பிறகு குளிரவைத்து தினமும் அருந்தி வரலாம். ஆப்பிள் சாறு அருந்தும் பழக்கம் பெரும்பாலும் மேலை நாடுகளில் இருந்து வருகிறது. என்றாலும் தோலில் பூச்சிக்கொல்லி படலங்கள் இருக்கும் என்பதால் தோலை நீக்கிவிடுவது நல்லது.