
நோய் ஏற்பட்டால் தடுப்பதற்கு மட்டுமின்றி ஒரு மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கும் ஆற்றலும் எலுமிச்சம் பழத்துக்கு உண்டு. சித்த மருத்துவத்தில் தனியொரு சிறப்பான இடத்தை பெற்றுள்ள எலுமிச்சம் பழத்தின் மருத்துவ குணங்கள் வருமாறு..
இரத்தம் தூய்மைக்கேடு அடைந்து விட்டால் அதை எலுமிச்சம் பழம் குணப்படுத்துகிறது.
மண்ணீரல் வீக்கம் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் எலுமிச்சைச் சாறு கொண்டு எளிதில் குணப்படுத்தி விட முடியும்.
அன்றாடம் எலுமிச்சை சாற்றை ஒரு குறைந்த பட்ச அளவு எப்படியாவது உபயோகித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையே எழுவதில்லை.
பித்தப்பை தொடர்பாக ஏற்படும் பல பிணிகளை குறிப்பாக மஞ்சள் காமாலையை குணமாக்க எலுமிச்சம் சாறு சிறந்து விளங்குகிறது.
எலுமிச்சம் பழத்தின் சாற்றில் குறிப்பாக பொட்டா சியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட் போன்ற பொருட்கள் கணிசமான அளவில் உள்ளன. இந்தப் பொருட்கள் அனைத்துமே நமது உடல் நலத்தை கட்டிக் காக்க உதவுபவையாக உள்ளன.
குறிப்பாக ஸ்கர்வி, வயிற்று வலி, அஜிரணம், மலச் சிக்கல் போன்ற கோளாறுகளை மிகக் குறைந்த காலத்தில் நிவர்த்தி செய்யும்
மனிதர்களுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் தாரளமான உள்ளது. இந்த சி-யை ஆஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வர். இது நீhpல் கரையும் தன்மை பெற்றது. ஆஸ்கார்பிக் அமிலம் உயிhpயல் ஆக்ஸி கரணங்களில் ஈடுபடுகிறது. இந்தச் சத்து நோய் கிருமிகளை கொல்லும் ஆற்றல் கொண்டது.
உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்ட மளிக்கக் கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்கு புத்துணர்வையும், தெம்பையும் அளிக்கிறது.
இதிலுள்ள பொட்டாசியம் இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன், நரம்பு தளர்ச்சி அடையாமல் காக்கிறது.
No comments:
Post a Comment