கண்கள் அழகாக மட்டுமல்ல, தெளிவான பார்வையோடும் இருப்பதற்கு, சில பயிற்சிகள் அவசியம். 'கண் களுக்கு கூடவா எக்ஸர்சைஸ்?’ என்று ஆச்சர்யப்படாமல் இந்தப் பயிற்சிகளை செய்து பாருங்கள். நாள் முழுவ தும் துறுதுறுவென்று சுறுசுறுப்பான உயிரோட்டம் கொண்ட கண்களுக்கு நான் கியாரன்டி!
கண்களை மூடிக்கொண்டு, தோள்களை அசைக்காமல் தலையை மட்டும் இடது வலமாக இருபது முறை சுழற்றுங்கள். இதேபோல வலது இடமாகவும் இருபது முறை செய்யுங்கள்.
கண்களை மூடியபடி சந்தோஷமான நினைவுகளில் கொஞ்ச நேரம் மூழ்கியிருங்கள். பிறகு, மெல்ல கண்களைத் திறந்து தூரத்தில் இருக்கும் மரம், செடி, கட்டடம் போன்றவற்றைப் பாருங்கள். பிறகு, கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பாருங்கள். இப்படி மாறி மாறி தூரமாக இருக்கும் பொருளையும் அருகில் இருக்கும் பொருளையும் பாருங்கள்.
தலையை நேராக வைத்துக் கொண்டு ரிலாக்ஸ்டாக கொஞ்ச நேரம் நில்லுங்கள். பிறகு, தலையை கொஞ்சமும் அசைக்காமல் விழிகளை மட்டுமே உருட்டி தலைக்கு நேர் மேலே இருக்கும் வானத்தைப் பாருங்கள். பிறகு தலையை அசைக்காமல் உங்கள் பார்வையை கால்களுக்கு அடியில் இருக்கும் பூமியை நோக்கி திருப்புங்கள். அதேபோல தலையை அசைக்காமல் வலதுபுறத்தில் தூரமாக இருக்கும் ஏதோ ஒரு மரம் அல்லது கட்டடத்தைப் பாருங்கள். அதன் பின் இடது பக்கமாக இருக்கும் ஏதாவது ஒரு மரம் அல்லது செடியைப் பாருங்கள். இந்த பயிற்சியை எத்தனை முறை செய்ய முடியுமோ அத்தனை முறை செய்யுங்கள்.
கருவளையத்திலிருந்து விடுதலை பெற..!
கருவளையம், பரம்பரை சார்ந்தது. வெயிலில் அலைவது, தூக்கமின்மை, மாதவிடாய், கர்ப்பகாலம் போன்ற காரணங்களால் பெண்களின் முகம் வெளுத்துப் போய் காட்சியளிக்கும். இந்த சமயங்களில் கருவளையம் 'ஹைலைட்’டாகி பளீரென்று தெரியும். இரவு தூங்கப் போவதற்கு முன்பு ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன், பாதி டீஸ்பூன் தேனை கலந்து கருவளையத்தின் மீது தடவிக் கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவிக்கொண்டு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கருவளையத்தின் மீது தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
உருளைக்கிழங்கை நன்கு கழுவிவிட்டு, கற்கண்டு அளவுக்கு அதை பொடிப்பொடியாக நறுக்கி, பேண்டேஜ் துணியில் வைத்து கருவளையத்தின் மீது வைத்து, சுமார் அரை மணி நேரம் படுத்து எழுந்து முகத்தைக் கழுவினாலும் கருவளையம் மறைந்துவிடும்.
No comments:
Post a Comment